யாழ். இந்திய துணைத்தூதருக்கு கார்த்திகை பூ சூடிய விவகாரம்! கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்
யாழ். நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்கா பசுமைக் கண்காட்சி மற்றும் மரக்கன்றுகள் விநியோக நிகழ்வு தொடர்பில் வெளியான தவறான தகவல்களுக்கு விளக்கம் கொடுக்கும் வகையில் யாழ். இந்திய துணைத்தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாணம்
நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் கடந்த நவம்பர் 20ம் திகதி நடந்த
நிகழ்வில் கார்த்திகைப் பூ சூடிய விடயம் தொடர்பில் இணையத்தளங்களில் விடுதலைப்
புலிகளுக்கு ஆதரவான நிகழ்வு என திரிபுபடுத்தப்பட்டு செய்திகள் வெளியான
நிலையிலேயே இந்திய தூதரகத்தினால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு
அறிக்கையொன்று இன்று வெளியாகியுள்ளது.
குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மரக்கன்றுகள் விநியோக நிகழ்வு தொடர்பான பல தவறான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தமை கவனத்திற்கு வந்தன.
யாழ். இந்தியத் துணைத் தூதுவர், அழைப்பின் பேரில் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
அத்தகைய பங்கேற்பு அமைப்பாளர்கள் அல்லது அவர்களின் செயல்களுடன் உத்தியோகபூர்வ நிகழ்ச்சிக்கு வெளியே, எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை.
இது தொடர்பில் அவருக்கு எந்த முன்
அறிவித்தலும் வழங்கப்படவில்லை என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 8 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri
