ஆற்றில் கவிழ்ந்த கார்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு ஏற்பட்ட சோகம்..!
எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டாம் தூண் பிரதேசத்தில் கிரிந்தி ஓயாவின் கிளை ஆற்றில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணித்த ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அவர்களில் ஒருவர் உப பொலிஸ் பரிசோதகர் மற்றொருவர் விமானப்படை வீரர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
