உடுவில் மகளிர் கல்லூரியின் எலைசா அக்னியூ ஞாபகார்த்த கட்டடத் திறப்புவிழா!
உடுவில் மகளிர் கல்லூரியின் இரண்டாவது அதிபர் எலைசா அக்னியூ ஞாபகார்த்த கட்டடத் திறப்புவிழா நடைபெற்றுள்ளது.
இந்தநிகழ்வு நேற்றுமுன்தினம் (18) உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் செல்வி றொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு, இறை வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. அதனை தொடர்ந்து வரவேற்பு நடனம், விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றன.
திறப்புவிழா
பின்னர் குறித்த கட்டடமானது நாடா வெட்டி வைக்கப்பட்டு சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த விழாவில் பிரதம அதிதியாக தென்னிந்திய திருச்சபையின் பேராயர் கலாநிதி வே.பத்மதயாளன் கலந்து சிறப்பித்தார்.
இதில், இந்தியாவில் இருந்து வருகைதந்த வடக்கு கேரளா தென்னிந்திய திருச்சபையின் பேராயரான கலாநிதி மார்டீன் போர்காய், உறுப்பினர்கள், அமெரிக்காவின் தர்மகர்த்தா சபையின் உறுப்பினரும் முன்னாள் அதிபருமான சிராணி மில்ஸ், முன்னாள் அதிபர் பற்றிசியா சுனித்தா ஜெபரட்ணம், கிறிஸ்தவ மதகுருக்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




