30 முன்னாள் எம்.பிக்களுக்கு உயரடுக்கு பாதுகாப்பு: வெடித்தது சர்ச்சை - செய்திகளின் தொகுப்பு
சுமார் 30 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த 15 மாதங்களாக உயரடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக, முன்னாள் ஆளுநர்கள் குழுவிற்கும் உயரடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட இந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா இரண்டு தேர்ந்த மெய்ப்பாதுகாவலர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பிரதான அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தமிழ்வின் மாலை நேர செய்திகளின் தொகுப்பு,