தம்பலகாமத்தில் சதுப்புநிலத்தில் சிக்கிய யானைக்குட்டி மீட்பு
தம்பலகாமம்- பரவிபாஞ்சான் குளத்திற்கு அருகாமையிலுள்ள சதுப்புநிலப் பகுதியில் சிக்கிய யானைக்குட்டி ஒன்று இன்று (28) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் கடற்றொழிலுக்கு சென்ற ஒருவர், சதுப்புநிலத்தில் சிக்கிக்கொண்டு தவித்துக்கொண்டிருந்த யானைக்குட்டியை கண்டு உடனடியாக கந்தளாய் வனஜீவராசி அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
மருத்துவ பராமரிப்பு
இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்ததையடுத்து யானைக்குட்டி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன் அதற்கு தேவையான மருத்துவ பராமரிப்பு வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு, வனவிலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு அருகே வருகின்றதற்கான பசுமை நிலப்பகுதி குறைபாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

IQ test: சிறுவனின் உண்மையான அப்பா யார்? 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடிந்தால் நீங்களே அறிவாளி! Manithan

இந்த வாரம் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் ஸ்பெஷல் கெஸ்ட்.. குடும்பத்துடன் வந்த பிரபலம், வீடியோ Cineulagam
