வீதி ஒன்றின் போக்குவரத்தை மூன்று நாட்களாக மூடியுள்ள காட்டு யானை
அம்பாறையின், தெம்பிட்டிய-மஹாஓயா வீதியில் கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்து மற்றும் பாதசாரிகள் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.
வீதி மூடப்பட்டதால் பொதுமக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களுக்கு கடுமையான ஆபத்து
காட்டு யானை ஒன்று உள்ளூரில் தயாரிக்கப்பட்ட "ஹக்கா பட்டாஸ்" என்ற வெடிபொருளால் கடுமையாக காயமடைந்துள்ளதாகவும், அம்பாறை கால்நடை மருத்துவ பிரிவு சிகிச்சை அளித்து வருவதாகவும் வனவிலங்குகள் பாதுகாப்பு அதிகாரி கித்சிரிமேவன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த யானை, வீதியில் அடிக்கடி செல்வதால் மக்களுக்கு கடுமையான ஆபத்து ஏற்படும் என்பதை கருதியே வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
குறித்த பகுதியில் பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காயமடைந்துள்ள யானையை பட்டாசுகளை வெடித்து விரட்ட முயன்றபோதும் பலனில்லை என்று அதிகாரி கூறியுள்ளார்.
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan