வீதி ஒன்றின் போக்குவரத்தை மூன்று நாட்களாக மூடியுள்ள காட்டு யானை
அம்பாறையின், தெம்பிட்டிய-மஹாஓயா வீதியில் கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்து மற்றும் பாதசாரிகள் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.
வீதி மூடப்பட்டதால் பொதுமக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களுக்கு கடுமையான ஆபத்து
காட்டு யானை ஒன்று உள்ளூரில் தயாரிக்கப்பட்ட "ஹக்கா பட்டாஸ்" என்ற வெடிபொருளால் கடுமையாக காயமடைந்துள்ளதாகவும், அம்பாறை கால்நடை மருத்துவ பிரிவு சிகிச்சை அளித்து வருவதாகவும் வனவிலங்குகள் பாதுகாப்பு அதிகாரி கித்சிரிமேவன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த யானை, வீதியில் அடிக்கடி செல்வதால் மக்களுக்கு கடுமையான ஆபத்து ஏற்படும் என்பதை கருதியே வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
குறித்த பகுதியில் பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காயமடைந்துள்ள யானையை பட்டாசுகளை வெடித்து விரட்ட முயன்றபோதும் பலனில்லை என்று அதிகாரி கூறியுள்ளார்.
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan