திருகோணமலையில் காட்டு யானைகளின் அட்டகாசம்: மக்கள் விசனம்(Photos)
திருகோணமலை - நாமல்வத்தை கிராமத்துக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததில் எட்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதியில் உள்ள மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாமல்வத்தை கிராம மக்கள் வீட்டுத் தோட்டம், விவசாயம் போன்றவற்றை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
யானைகளின் அட்டகாசம்
குறித்த கிராமத்தை சுற்றி யானை மின் வேலிகள் அமைக்கப்பட்டிருந்த போதிலும் யானைகள் மாலை வேளையில் கிராமத்துக்குள் உட்புகுந்து வீட்டுத் தோட்டங்கள்,தென்னை மரங்கள்,வாழை மரங்கள் போன்றவற்றை சேதப்படுத்தி வருவதாகவும் சுட்டிக் காட்டுகின்றனர்.
இதேவேளை யானைகளை விரட்டுவதற்காக முற்படுகின்ற போது வெளிச்சத்தை நோக்கி யானைகள் வருவதாகவும், வீடுகளை உடைத்து சேதப்படுத்தி வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இதன் போது கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் இரண்டு நாட்களில் எட்டு வீடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாகவும்,நெல் தானியங்களை உட்கொண்டு சென்றுள்ளதாகவும் அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் கிராமத்தை சுற்றி போடப்பட்டிருக்கின்ற யானை மின் வேலிகள் சீரான முறையில் கவனிக்கப்படாமல், மின் இணைப்பு இன்றி இருப்பதனாலயே யானைகள் கிராமத்துக்குள் உட்புகுந்து அட்டகாசம் செய்வதாகவும் குறிப்பிடுகின்றனர்.
வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு யானைகள் அட்டகாசம் செய்யும் போது தொலைபேசி அழைப்பு விடுத்தாலும் கூட உரிய நேரத்தில் வருகை தருவதில்லை எனவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்தனர்.
ஆகவே யானைகளின் அட்டகாசங்களை குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாமல்வத்தை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
