அதிவேக நெடுஞ்சாலைகளில் பயன்படுத்தப்படும் காட் தொடர்பில் வெளியான தகவல்
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு, பணம் செலுத்துவதற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட காட் E.T.C. (Electronic Toll Collection) அட்டைகள் நீண்ட காலமாக வழங்கப்படாததால், அரசுக்கு பாரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு சாரதிகளுக்கும் பெரும் அசௌகரியங்குள்ளாகியுள்ளனர்.
இந்த அட்டைகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அறிமுகப்படுத்தப்பட்டு, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் காசு செலுத்தாமல், ரீலோட் செய்யக்கூடிய E.T.C. அட்டையை இயந்திரத்தில் வைத்து கட்டணம் செலுத்தி, தாமதமின்றி நுழைந்து வெளியேற முடியும்.
விலை குறைக்கப்பட்டுள்ள அட்டைகள்
இந்த அட்டைகள் நீண்ட காலமாக வழங்கப்படாததால் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளவர்களை கருத்தில் கொண்டு, அவற்றை விரைவாக மீண்டும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிகாரி, இந்த மாத இறுதிக்குள் 5,000 புதிய அட்டைகள் நாட்டிற்கு கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை சுமார் 50,000 அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், புதிய அட்டைகளை வாங்க கோரப்பட்ட டெண்டர் செயல்முறையின் மூலம் அவை கிடைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

முன்னர் ஒரு அட்டையின் விலை சுமார் ரூ. 6,000 ஆக இருந்த நிலையில், அதே போன்ற அட்டையை ரூ. 300-க்கும் குறைவான விலையில் பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அட்டைகளை பயன்படுத்தி பின்வரும் நுழைவாயில்களில் வெளியேற முடியும்: பேலியகொட (Peliyagoda) ஜா-எல (Ja-Ela) சீதுவ (Seeduwa) மேலும், இந்த மூன்று இடங்களிலும் அட்டைகளை பெறவும் முடியும் என அவர் தெரிவித்தார்.