மொத்த தேவையில் 12 சதவீதமாக குறைந்த நீர்மின் உற்பத்தி! நிலைமை மேலும் மோசமாகலாமென எச்சரிக்கை
மொத்த மின்சாரத் தேவையில் 12 சதவீதமாக நீர்மின் உற்பத்தி குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் வறட்சி நிலை காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யாவிட்டால் இன்னும் மூன்று வாரங்களுக்கு மட்டுமே நீர் மின்சாரம் வழங்க முடியும் என கூறப்படுகிறது.

மின்சார உற்பத்தி
66 சதவீத வெப்ப பசுமை இல்லங்களும், 11 சதவீத சூரிய மற்றும் காற்றாலை மின்சாரமும் மின்சார உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகிறது.
இதன்காரணமாக நாளொன்றுக்கு 90 கோடி ரூபாவை அதிகமாக மின்வாரியம் செலவிட வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மின்சார தேவையில் 58 சதவீதம் நீர் மின் உற்பத்தியில் இருந்துள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் மழை பெய்யாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri