உத்தேச மின்சார சபை சட்டமூலம் : உச்சநீதிமன்றத்தின் தீர்மானம்
உத்தேச மின்சார சபை சட்டமூலம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு இரகசிய ஆவணமாக சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக உச்சநீதிமன்றம் (Supreme Court) அறிவித்துள்ளது.
அரசாங்கம் முன்வைத்துள்ள மின்சார சபை சட்டமூலமானது, அரசியலமைப்பின் சில பிரிவுகளை மீறும் வகையிலும், அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம், முன்னிலை சோசலிசக் கட்சி உள்ளிட்ட 14 தரப்புகள் இதற்கு எதிரான ஆட்சேபனை மனுவொன்றை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளன.
கையளிக்கப்பட்ட மனு
இந்நிலையில், மேற்குறித்த உத்தேச மின்சார சபை சட்டமூலத்தை (Proposed Electricity Board) நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற உத்தரவிடுமாறு குறித்த மனுக்கள் மூலம் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த மனுவை ஆராய்ந்த மூவர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, சட்டமூலம் தொடர்பான தங்களின் நிலைப்பாட்டை இரகசிய ஆவணம் வடிவில் சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam

ஜீ தமிழின் பிர்ம்மாண்ட நிகழ்ச்சியான சரிகமப 5வது சீசனில் புதிய நடுவர்.... இனி இசையோடு பஞ்ச் தெறிக்க போகுது.. Cineulagam

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri
