புறக்கோட்டை மொத்த சந்தையில் மின் சாதனப் பொருட்களுக்கு தட்டுப்பாடு
புறக்கோட்டை மொத்த சந்தையில் மின்சாதனப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டமையே இதற்குக் காரணம் என வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால் புறக்கோட்டை மொத்த சந்தையில் உள்ள பல மொத்த விற்பனைக் கடைகளில் மின்சாதனப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், மின்சாதனப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. 3000 ரூபாயாக இருந்த மின் சாதனங்களின் விலை 12,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்சார அடுப்புகள், அரைக்கும் இயந்திரங்கள், மின்சார கேத்தல்கள் மற்றும் மின்சார அயன்கள் போன்ற உபகரணங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.