கிளிநொச்சியில் வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல்
எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னாயத்த பணிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஓர் அங்கமாக கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களின் வலய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு இன்று (05) நடைபெற்றுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனின் தலைமையில், மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 09.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களிற்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட பதில் உதவித் தேர்தல் ஆணையாளர் D.C அரவிந்தராஜ்ஜால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்களாக நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.








புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 19 மணி நேரம் முன்

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
