இளையோர்களை வெற்றிபெறச் செய்ய தேர்தல் செலவுகளுக்கு உதவுமாறு க.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள்
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய சிந்தனையும், ஆற்றலும், தூய கரங்களும் கொண்ட இளையோர்களைக் கொண்ட தனது வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யும் தனது முயற்சிக்கு முழுமையான ஆதரவினை வழங்குமாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மிகுந்த நிதி நெருக்கடியின் மத்தியில் அநாவசியமான செலவுகளைத் தவிர்த்து எதிர்வரும் தேர்தலை முற்றுமுழுதாக மக்களை நம்பி எதிர்கொள்வதாக தெரிவித்துள்ள அவர், சில அவசியமான செலவுகளை செய்வதற்கான நிதி உதவிகளை முடிந்தளவு செய்துதவுமாறு நிலத்திலும் புலத்திலும் உள்ள மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிதி உதவி
காலங்காலமாக தமிழ் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் கட்சிகள் தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார அபிலாஷைகளை வென்றெடுப்பதில் தோல்வியைத் தழுவியுள்ளன.
அதனால் தமிழ் மக்களுக்கான அரசியலை முன்னெடுத்துச்செல்வதற்கு இளையோர்களைத் தயார்படுத்தி அவர்களின் கைகளில் அரசியலை ஒப்படைக்கும் தருணம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ள விக்னேஸ்வரன், நூற்றுக்கணக்கான இளையோர்களை எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் களம் இறக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் தேர்தலில் இளையோர்களை வெற்றிபெறச் செய்து, தமிழ் அரசியலில் ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்துவதற்கு தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவினை அளிக்க வேண்டும்.
மேலும், தமது பிரசார நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இயன்றளவு நிதி உதவிகளை அவர்களுக்கு வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிதி உதவி செய்ய வேண்டும்
தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் முதன்முறையாக இம்முறை தேர்தலில் களம் இறங்குவதாலும் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக தேர்தல் பிரசார செலவுகள் மிகவும் அதிகமாக இருப்பதால் புலம்பெயர் நாடுகளிலும் உள்நாட்டிலும் வாழும் நண்பர்கள், தனது மாணவர்கள், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தம்மால் இயன்றளவுக்கு நிதி உதவி செய்ய வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
உதவிகளை கீழ்வரும் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்குமாறும் கடந்த பாராளுமன்ற
தேர்தலில் செய்ததுபோன்று உடனடியாக பற்றுச்சீட்டு மற்றும் நன்றி தெரிவிக்கும்
கடிதம் உடனடியாக அனுப்பிவைக்கப்படும் என்றும் நிதி உதவி செய்பவர்கள் தங்கள்
பெயர் விபரங்களை cvwoffice18@gmail.com, cv.wigneswaran@gmail.com ஆகிய
மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுவதாகவும் விக்னேஸ்வரன்
தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
