தேசிய பட்டியல் ஆசனங்களுக்காக காத்திருந்த 74 பேருக்கு எதிராக நடவடிக்கை
கடந்த பொதுத் தேர்தலில் தேசியப் பட்டியலுக்காக போட்டியிட்ட வேட்பாளர்களில், அரசியல் கட்சிகளிற்கு செலவிட்ட தேர்தல் கால செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 74 பேருக்கு எதிராக வழக்குத் தொடர தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தற்போது, வேட்பாளர் பட்டியல்களை பொலிஸாரிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சிந்தக குலரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக, தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 134 அரசியல் கட்சிகளுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு வழக்குத் தொடர தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை
மேலும், செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் எண்ணிக்கை எண்ணூறுக்கும் மேல் ஆகும். அவர்கள் மீதும் தனித்தனியாக வழக்கு தொடரப்படும்.
அந்தந்த பொலிஸ் நிலையங்களினால் விசாரணைகள் மேற்கொண்டு, விசாரணைக் கோப்புகள் சட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் குலரத்ன கூறியுள்ளார்.
அதேவேளை, செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக அபராதம், சிறைத்தண்டனை அல்லது தேர்தல் நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பது போன்ற சட்ட நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் விதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam
