தேர்தல் கூட்டத்தில் சீருடையில் தாதியர்: அறிக்கை கோரியது தேர்தல்கள் ஆணைக்குழு
தேசிய மக்கள் சக்தியின் (NPP) அனுசரணையுடன் நடைபெற்ற தேசிய அகில இலங்கை தாதியர் மாநாட்டில் அரச தாதியர்கள், சீருடைகளுடன் பங்குபற்றியமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் விளக்கம் கோரியுள்ளது.
இது தொடர்பில் தகவல் வழங்கிய, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, குறித்த சந்திப்பில் சீருடை அணிந்த தாதியர்கள் இருந்தமை தொடர்பில் ஆணைக்குழுவிற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த விவகாரம், தங்களுக்கு நேரடியாக தொடர்புடையது அல்ல என்றாலும், தங்களுக்குக் கிடைத்த பல முறைப்பாடுகள் காரணமாக, தாம் விளக்கம் கோரியதாக அவர் கூறினார்.
கடமை விடுப்பு
இதேவேளை, அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) தலைமையில் நடைபெற்ற, தேசிய அகில இலங்கை தாதியர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுகாதார அமைச்சின் செயலாளர், தாதியர்களுக்கு கடமை விடுப்பு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

சமீபத்தில் திருமணம் செய்த தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படியொரு சோகமா?... அவரே வெளியிட்ட போட்டோ Cineulagam

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

மணிக்கு 12,300 கிமீக்கு மேல் வேகம்.., ரஷ்யாவின் RS-26 Oreshnik ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் விவரம் News Lankasri
