சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் விசேட தீர்மானம்
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு வேட்பாளர் தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
தமது கட்சி ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளரை இன்று (31.07.2024) அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க நேற்று (30) அறிவித்திருந்தார்.
கொழும்பு டாலி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இறுதித் தீர்மான
மேலும் கட்சியின் உயர்மட்ட செயற்குழு, கூடி பெரும்பான்மையின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீரவும் கலந்துககொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி 14 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri