கட்சிகளின் செயலாளர்களை அழைக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு!
அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு விசேட கலந்துரையாடல் ஒன்றுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலுக்கான அறிவிப்பினை இன்றைய தினம் (16.03.2023) தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு மாத்திரம் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு
அதற்கான தீர்மானம் இன்றைய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் எதிர்வரும் 23ஆம் திகதி குறித்த அரசியல் கட்சிகளின் செயலாளர்களைத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சொத்து மற்றும் வங்கி சேமிப்பு விபரங்களைச் சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளின் பதிவை இரத்துச் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கலந்துரையாடலின் போது அடுத்த வருடத்திற்கான பதிவைப் புதுப்பிக்கும் விண்ணப்பத்துடன் சொத்துமதிப்பு குறித்த தகவல்களை இணைக்காத அரசியல் கட்சிகளின் பதிவை இரத்துச் செய்யத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 18 மணி நேரம் முன்
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri