கட்சிகளின் செயலாளர்களை அழைக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு!
அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு விசேட கலந்துரையாடல் ஒன்றுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலுக்கான அறிவிப்பினை இன்றைய தினம் (16.03.2023) தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு மாத்திரம் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு
அதற்கான தீர்மானம் இன்றைய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் எதிர்வரும் 23ஆம் திகதி குறித்த அரசியல் கட்சிகளின் செயலாளர்களைத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சொத்து மற்றும் வங்கி சேமிப்பு விபரங்களைச் சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளின் பதிவை இரத்துச் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கலந்துரையாடலின் போது அடுத்த வருடத்திற்கான பதிவைப் புதுப்பிக்கும் விண்ணப்பத்துடன் சொத்துமதிப்பு குறித்த தகவல்களை இணைக்காத அரசியல் கட்சிகளின் பதிவை இரத்துச் செய்யத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam
