அமைச்சரவை முடிவுகள் குறித்து கடும் அதிருப்தியில் தேர்தல் ஆணையகம்
அமைச்சரவையால், அண்மையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இலங்கை தேர்தல் ஆணையகம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது,
அதில் சில முடிவுகள் ஒரு வேட்பாளரின் தெளிவான ஒப்புதல்களாக கருதப்படுவதாக ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், அமைச்சரவையின் எந்தவொரு தீர்மானத்தையும் நிறுத்துவதற்கு ஆணையகத்துக்கு அதிகாரம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
வேட்பாளரை ஊக்குவிக்கும் செயல்கள்
இருப்பினும், சில முடிவுகளை ஒத்திவைக்க, ஆணையகம் பரிந்துரைத்துள்ளது.
உதாரணமாக, சிறப்பு மாதாந்த உதவித்தொகையான 3000 ருபாய் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, செப்டெம்பர் முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அதனை, அக்டோபர் மாதத்திற்கு பின் நடைமுறைப்படுத்த ஆணையகம், அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, அண்மைய அமைச்சரவை அனுமதிகளை ஒரு வேட்பாளரை ஊக்குவிக்கும் செயல்களாகவே கருதுவதாக, ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 7 மணி நேரம் முன்

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
