வடக்கில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக குவியும் மக்கள்!
எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவிருக்கும் நிலையில், தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு வட மாகாணத்திலேயே பெருகிய வண்ணம் உள்ளது.
குறிப்பாக, இடம்பெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் பிரசாரங்களிலும் சரி தேர்தல் பரப்புரைகளின் போது மக்களிடையே பொது வேட்பாளருக்கான ஆதரவு கூடிக் கொண்டே செல்கின்றது.
அந்தவகையில், வடக்கு மாகாணத்திலேயே மேற்கொள்ளப்பட்ட மக்களுடனான கருத்து பகிர்வுகளின்படி தமிழ் தேசிய மக்களினுடைய திரட்சியை வெளிப்படுத்துவதற்காகவும் தமிழ் மக்களினுடைய உணர்வு என்றுமே மங்கவில்லை என்பதை வெளிப்படுத்துவதற்காகவும் நாம் தமிழ் பொது வேட்பாளருக்கே எமது வாக்கினை அளிப்போம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாட்டை தமிழ் மக்கள் முற்றாக நிராகரிப்பதற்காக தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்கை அளிப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan