ஆரம்பமானது ஜனாதிபதி வேட்பாளர்களின் பொதுமேடை விவாதம்..!
2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பொது மேடை விவாதம் தற்போது தொடங்கியுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இன்று (07) பிற்பகல் 3 மணி தொடக்கம் 5 மணி வரை இந்த விவாதமானது நடைபெறுகின்றது.
இதில், ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர, நாமல் ராஜபக்ச மற்றும் பா. அரியநேத்திரன் ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.
மக்களின் தெரிவு
ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்களின் எதிர்கால வேலைத்திட்டத்தை மக்களுக்கு முன்வைப்பதற்கும் பொருத்தமான வேட்பாளரை மக்கள் தெரிவு செய்வதை இலகுபடுத்துவதற்கும் இந்தாண்டு தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுக்கு இடையில் விவாதம் நடத்த கடந்த மார்ச் 12 அன்று திட்டமிடப்பட்டிருந்தது.

இதன்போது, வேட்பாளர்கள் விவாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் தங்கள் விருப்பப்படி மக்களுக்கு ஒரு செய்தியை வழங்கலாம் மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் தொடர்பான கேள்விகள் அவர்களிடம் எழுப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 16 மணி நேரம் முன்
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam