யாழில் தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளருக்காக பரப்புரை கூட்டம்
தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரனை (P.Ariyanethran) ஆதரித்து யாழ். (Jaffna) வடமராட்சியில் பரப்புரை கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இக்கூட்டமானது, நேற்று (11.09.2024) மாலை நடத்தப்பட்டுள்ளது.
வடமராட்சியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்தியர் சி.சிவகுமார் தலைமையில் குறித்த பரப்புரை கூட்டம் நடைபெற்றுள்ளது.
கலந்து கொண்டோர்
இக்கூட்டத்தில், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான பா.கஜதீபன் மற்றும் விந்தன் கனகரட்ணம், அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
