கொழும்பு வந்த சகோதரிகளுக்கு நேர்ந்த அவலம்! - நபர் ஒருவரின் மோசமான செயல்
கொழும்பு கண் வைத்தியசாலைக்கு வைத்திய உதவி பெற வந்த சகோதரிகளாகிய வயோதிபப் பெண்கள் இருவரை கண் நிபுணரிடம் அறிமுகம் செய்வதாக உறுதியளித்த நபர் ஒருவர் கொள்ளையடித்துள்ளார்.
பாதுக்காவில் உள்ள வாகா பகுதியைச் சேர்ந்த சகோதரிகளான ஹேமலதா மற்றும் பிரேமாவதி ஆகியோர் மருத்துவ சிகிச்சை பெற வந்ததாகவும், அவர்கள் அணிந்திருந்த காதணிகள் தங்களை ஏமாற்றி ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் கூறினார்.
சந்தேக நபர் அவர்களைச் சந்தித்ததாகவும் அவர் தனக்குத் தெரிந்த கண் நிபுணரிடம் அவர்களை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்ததாகவும் பிரேமாவதி கூறினார்.
"அவர் எங்களை ஒரு கண் நிபுணரிடம் அறிமுகப்படுத்தி, எங்களுக்கு இலவசமாக சிகிச்சை பெற்றுத்தருவதாக கூறினார். நாங்கள் ஏழைகள் என்பதை நிரூபிப்பதற்காக எங்கள் காதணிகளைக் கழற்றுமாறு அறிவுறுத்தினார்.
நாங்கள் அவரைப் பின்தொடர்ந்து எங்கள் காதணிகளைக் கழற்றி அவர் கொடுத்த காகிதத்தில் சுற்றினோம். நாங்களும் கைக்குட்டையால் கட்டி வைத்துக்கொண்டோம். எனினும் அவர் காதணிகளை கொள்ளையிட்டதை பின்னர் கண்டுபிடித்தோம்” என்று பிரேமாவதி கூறினார்.
பின்னர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். எனினும் அங்குள்ள பொலிஸார் தங்கள் எல்லைக்கு வெளியே இந்த சம்பவம் நடந்ததாக கூறி புகாரை எழுத மறுத்துவிட்டார்.
பின்னர் மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். "நாங்கள் ஏழை ஆதரவற்ற பெண்கள், எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்" என்று பிரேமாவதி கூறினார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 10 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
