கொடிகாமத்தில் விபத்துக்குள்ளான வயோதிப பெண் மரணம்
யாழ்.கொடிகாமம் பகுதியில் வயோதிப பெண் ஒருவர் விபத்துக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் கொடிகாமம் தொடருந்து நிலையத்திற்கு அருகே உள்ள வீதியால் குறித்த பெண் மிதிவண்டியில் பயணம் செய்துள்ள நிலையில்,பின்னால் வந்த மோட்டார் வாகனம் அவரை மோதியுள்ளது.
இதனையடுத்து படுகாயமடைந்த அவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் .போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இவ்வாறு சிகிச்சை பெற்றுவந்த குறித்த பெண் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
மீசாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த அன்னலட்சுமி (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.