கிளிநொச்சியில் இராணுவத்தினரின் உதவியுடன் ஓய்வூதிய கொடுப்பனவை பெற்ற முதியவர்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் ஓய்வூதியக் கொடுப்பனவு பெறுவதற்காக இராணுவத்தினரால் முதியவர்கள் வங்கிகளுக்கு அழைத்து வரப்பட்டனர்.
நாட்டின் பல பாகங்களில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் ஜூன் 10 மற்றும் 11 திகதிகளில் ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் தற்போதுள்ள பயணத்தடையின் காரணமாக ஓய்வூதியக் கொடுப்பனவைப் பெறுவோர் தமது கொடுப்பனவினை பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில், இராணுவத்தினரால் வாகன ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு,ஓய்வூதியக் கொடுப்பனவைப் பெறுவோர் அழைத்து வரப்பட்டு பெற்ற பின்னர் மீண்டும் அவர்களது வீடுகளுக்கே அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த உதவியினை செய்த இராணுவத்தினருக்கும் மற்றும் ஜனாதிபதிக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவைப் பெறுவோர் தமது நன்றியினை தெரிவித்துள்ளனர்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 3 மணி நேரம் முன்
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri