யாழில் விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் உயிரிழப்பு
வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபரை மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மட்டுவில் வடக்கு, சந்திரபுரத்தைச் சேர்ந்த க.லோகநாதன் (வயது – 65) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள வீதியில், வர்த்தக நிலையத்துக்குச் சென்றுவிட்டு வீதியைக் கடக்க முற்பட்டபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வயோதிபரை மோதியுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதியான இளைஞர் இருவரும் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட வயோதிபர்
நேற்று அங்கு உயிரிழந்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
