யாழில் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு!
யாழில் நேற்றையதினம்(06.08.2026) மன விரக்தியில் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
கைதடியைச் சேர்ந்த கனகசபை அருமைரட்ணம் (வயது 80) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் கைதடி பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த நிலையில் மனவிரக்தி காரணமாக தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.

இந்நிலையில் அவரது உறவினர்கள் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதன்பின்னர் சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொண்டு சென்றுள்ளனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வி.அன்ரலா மேற்கொண்டார்.
விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.