சாவகச்சேரியில் பட்டா ரக வாகனம் மோதி முதியவர் மரணம்
Death
Police
Accident
Chavakachcheri
By Rakesh
யாழ். தென்மராட்சி, சாவகச்சேரி நகர் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாவச்சேரியிலிருந்து கொடிகாமம் நோக்கி சைக்கிளில் பயணித்த முதியவரை எதிரே வந்த பட்டா ரக வாகனம் மோதியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வீதியோரத்தில் தரித்திருந்த வாகனம் ஒன்றை முதியவர் கடந்து செல்ல முற்பட்ட போதே எதிரே வந்த வாகனம் மோதியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் சாவகச்சேரியை சேர்ந்த நடராசா பொன்னுச்சாமி (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 18 மணி நேரம் முன்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US