இலங்கையில் விடுதி உரிமையாளரை தாக்கிய வெளிநாட்டவர் கைது
வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்பல்கம, குருந்துவத்த பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த எகிப்திய சுற்றுலாப் பயணி விடுதியின் உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி, அறைக்கு தீ வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
33 வயதான எகிப்திய சுற்றுலாப் பயணி மூன்று வருடங்களாக இந்த சுற்றுலா விடுதியில் தங்கியிருந்ததாகவும் சுமார் ஒரு மாத காலமாக விடுதிக்கு செலுத்தவேண்டிய பணத்தை அவர் செலுத்தத் தவறியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சுற்றுலா பயணியிடம், விடுதிக்கான கட்டணத்தை செலுத்துமாறு உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ள சந்தர்ப்பத்தில் இவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாப்பயணி கைது
இதன்போது கோபமடைந்த சுற்றுலா பயணி விடுதி உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
பின்னர் தான் தங்கியிருந்த அறைக்குள் எரிவாயு சிலிண்டரை வீசிவிட்டு, தீ வைத்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் காயமடைந்த சுற்றுலா பயணியை மீட்ட பொலிஸார் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தீப் பரவல் காரணமாக விடுதியின் அறைகளுக்கும், சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் சுற்றுலாப்பயணி கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri
