முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா!
நாட்டில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சி.டி. அலஹக்கான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஒரு புறத்தில் விலங்குகளுக்கான தீவனங்களின் விலை அதிகரித்து செல்வதாகவும் மறுபுறத்தில் முட்டைக்கான விலை குறைவடைந்து செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை தொடர்ந்தால் நாட்டில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விலங்குகளுக்கான உணவு மற்றும் முட்டை விலைக்கு இடையிலான தொடர்பினை அரசாங்கம் ஏற்படுத்த தவறினால் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டைகளை உற்பத்தி செய்வதனை தவிர்க்க கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது முட்டையை உற்பத்தியாளர்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முட்டை உற்பத்தியாளர்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் நுகர்வோர் ஆகிய தரப்பினருக்கு நியாயம் ஏற்படக்கூடிய வகையிலான முட்டை விலை முறைமையொன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam