இலங்கையில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் ஐந்திற்கான புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு இணையத்தளத்தின் ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் நாட்டில் நிலவும் கொவிட் தொற்று நோயைக் கருத்தில் கொண்டு குறித்த பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான மேலதிக தகவல்களை www.donet.lk என்ற இணையத்தளத்தின் மூலமாக அறிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam