சீருடை மற்றும் பாடப் புத்தகங்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு
புதிய கல்வி ஆண்டிற்கான பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள் நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சீருடை விநியோகம்
இது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில்,
பாடசாலை சீருடை மற்றும் பாடப்புத்தக விநியோகம் செய்யும் பணி என்பன எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பணிகள், தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் 2024ஆம் கல்வி ஆண்டிற்கான கற்றல் செயற்பாடுகள் நாளையதினம்(19) ஆரம்பிக்கப்படவுள்ளன.
2023ஆம் கல்வி ஆண்டிற்கான மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் கடந்த வெள்ளிக்கிழமையுடன்(16) நிறைவடைந்த நிலையில், நாளை முதல் புதிய கல்வி ஆண்டிற்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
