பாடசாலை கற்றல் நடவடிக்கை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு
இலங்கையில் பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு திரும்புவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்க மற்றும் அரச அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்ட தனியார் பாடசாலைகளில் மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று முதல் அனைத்து தரங்களில் கல்வி கற்றும் மாணவ மாணவியர் முழுமையாக பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளை கருத்திற் கொண்டு பாடசாலை கற்றல் நடவடிக்கைகளுக்காக மாணவர்கள் குழுக்களாக அழைக்கப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு மாணவ மாணவியருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
மத்திய கிழக்கை சூழ்ந்துள்ள போர் மேகம் இந்தியாவையும் ஆக்கிரமிக்கும் அபாயம் - நாடு முழுவதும் பறந்த உத்தரவு
தீவிரமடையும் நிலைமை: டுபாய் - அபுதாபியில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை - வெளியானது அறிவிப்பு