பிரதமராக பதவியேற்றது ஏன்..! ரணில் விளக்கம்
தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காகவே பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
“தேசத்தைக் காப்பாற்றவும், எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க வேண்டும். அதே வேளையில் இந்த நாட்டு மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இதனை என்னால் தனியாக செய்ய முடியாது, எனவே எனக்கு சர்வதேச உதவி தேவை” என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

"தேசத்தைக் காப்பாற்ற நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவும் நான் உத்தேசித்துள்ளேன்," என்று ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை தொடர்ந்து கடந்த 9ம் திகதி பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். இதனையடுத்து முழு அமைச்சரவையும் கலைக்கப்பட்டது.
இந்நிலையில், புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க இன்று ஆறாவது தடவையாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். 2021 ஜூன் 23ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நுழைந்து, பத்தரை மாதங்களில் ரணில் பிரதமராகியுள்ளார்.

1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 20 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan