பொருளாதார நெருக்கடி! வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை வெளியானது
இலங்கையில் கடந்த 20 மாத காலப் பகுதியில் ஒரு மில்லியனளவானோர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
புள்ளி விபரத் தகவல்கள்
இலங்கை குடிவரவு, குடியகழ்வுத் திணைக்களம் இந்த புள்ளி விபரத் தகவல்களை வெளியிட்டுள்ளன.
இந்த காலப் பகுதியில் மொத்தமாக 1050024 பேர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி
கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் 1013992 பேர் புதிதாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக புத்திஜீவிகள், இளைஞர், யுவதிகள், தொழில்துறை வல்லுனர்கள் உள்ளிட்ட பலரும் வெளிநாடுகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.