கொங்கோவில் தீவிரமடையும் எபோலா: ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு
மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு பதிவான ஒட்டுமொத்த எபோலா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,011 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில், தங்களுக்குரிய ஊதியம் வழங்கப்படாததை எதிர்த்து அந்த நாட்டின் சுகாதாரப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு தடுப்புப் பணிகள் பெரும் தேக்கத்தைச் சந்தித்துள்ளன.
கொங்கோவின் இத்துரி (Ituri) மாகாணத்தில் பரவி வரும் எபோலா தொற்றால் இதுவரை 2,011 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 754 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழப்புகள்
எனினும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த எண்ணிக்கையை விட உண்மையான உயிரிழப்புகள் 2 முதல் 4 மடங்கு வரை அதிகமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
வரலாற்றிலேயே மிக வேகமாகப் பரவி வரும் மூன்றாவது பெரிய எபோலா அலை இதுவென எல்லைகளற்ற மருத்துவர்கள் (MSF) அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், தங்களுக்குச் சேர வேண்டிய ஊதியம் பல மாதங்களாக வழங்கப்படவில்லை எனக் கூறி இத்துரி மாகாணத்தின் புனியா (Bunia) மற்றும் ரவாம்பரா (Rwampara) பொது மருத்துவமனை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொற்று பரவத் தொடங்கியது முதல் மிகக் கடினமான சூழ்நிலைகளிலும், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியும் உழைத்த தங்களுக்கு எவ்வித ஊதியமும் வழங்கப்படவில்லை எனப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்! Manithan