ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதிய பிரதிநிதியை சந்தித்த கிழக்கு ஆளுநர்
திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான UNFPA பிரதிநிதி குன்லே அதேனி இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பானது, நேற்று (10) திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, கிழக்கு மாகாணத்தில் உள்ள சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளுக்கு ஆதரவளிக்க பல்வேறு பங்குதாரர்களுடன் UNFPA இன் தொடர்ச்சியான ஒத்துழைப்பை அதேனி வலியுறுத்தினார்.
முக்கிய துறைகள்
பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆரோக்கியம், பாலின சமத்துவம் மற்றும் காலநிலை மீள்தன்மை போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்துவதை அவர் முன்னிலைப்படுத்தினார்.
மேலும், இந்த முயற்சிகளில் ஆளுநரின் தொடர்ச்சியான ஆதரவினை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த ஆளுநர், கிழக்கு மாகாணத்தின் பல்கலாசாரத் தன்மையை அங்கீகரித்து, அதன் பன்முகத்தன்மையை பலமாகப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாகாணத்தில் சமூக மற்றும் இன நல்லிணக்கத்தையும், பாலின சமத்துவத்தையும் மேம்படுத்துவதே தனது முதன்மையான கவனம் என்று அவர் கூறினார்.
குடும்ப வன்முறைகள் அதிகமாக இருப்பதையும் சுட்டிக்காட்டிய ஆளுநர், பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
அவர் முயற்சிகளுக்கு முழு ஆதரவையும் உறுதியளித்தார். மற்றும் இந்த சவால்களை எதிர்கொள்ள கூட்டு முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
அதேனி, கலந்துரையாடலுக்கு நன்றி தெரிவித்ததோடு, ஆளுநரின் பதவிக்காலத்திற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். ஆளுநரின் தலைமையில் கிழக்கு மாகாணம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
