மட்டக்களப்பு சிறையில் இருந்த சஹ்ரான் எங்கே..! மட்டு.தேரரின் பரபரப்பான தகவல்கள்
உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட சஹ்ரான், தாக்குதலுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் எப்படி சிறைச்சாலைக்குள் இருந்து வெளியில் வந்து தாக்குதலை நடத்தினார் என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
குண்டுத் தாக்குதலின் பின்னரே அவர் தொடர்பான காணொளிகளை பார்க்க முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கைது செய்யப்பட்ட சஹ்ரான்
2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதலுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட சஹ்ரான் மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்படுகிறார். சஹ்ரானை சிறைப்படுத்த தீர்ப்பளித்த மட்டக்களப்பு நீதிபதி பின்னர் விடுமுறையில் செல்கிறார்.

அவர் விடுமுறையில் சென்ற இரண்டு நாட்களின் பின் அவருக்காக பதில் நீதிபதி சேவையில் இருந்தார்.அப்போது அவருக்கு பிணை வழங்கியது யார்?பிணை நின்றது யார்? ஏன் பரிசோதனை நடத்தவில்லை.பிணை வழங்கிய பின்னர் சஹ்ரான் எங்கு சென்றார் என்பது தொடர்பில் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை.
தாக்குதலின் பின்னர் அவர் வெளியிட்ட காணொளி நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் இலங்கையில் ISIS இருப்பதாக தெரியவந்தது.
காத்தான்குடியில் சஹ்ரானின் போதனைகள்
நான் மட்டக்களப்பில் 35 வருடங்களாக இருக்கிறேன்.தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்திலும் இருந்ததால் இவை ஒவ்வொன்றும் தொடர்பில் எனக்கு நன்றாக தெரியும்.
சஹ்ரான் தனது போதனைகளுக்காக முதன் முதலில் காத்தான்குடியில் தனக்கான தளத்தை அமைத்து கொண்டு முஸ்லிம் மக்களை திரட்டும் போது நான் இது தொடர்பில் தெரிவித்தேன்.

அன்று சில ஊடகங்களில் இவை செய்திகளாக சென்றன. நீண்ட காலம் கடந்துள்ளதால்,அதாவது ஆறு வருடங்கள் கடந்து விட்டதால் சில சம்பவங்கள் ஞாபகமில்லை. பொலிஸ் புலனாய்வு திணைக்களத்திற்கு அன்று நான் வாக்குமூலம் வழங்குவதாக கூறினேன்.
என்னிடம் சாட்சியங்கள் இருப்பதாகவும் தெரிவித்தேன்.ஆனால் யாரும் எனக்கு சந்தர்ப்பம் வழங்க வில்லை.அன்று நாங்கள் கத்தி கத்தி சொன்னோம் இவ்வாறான குழுக்கள் உருவாவதாக, ஆனால் அன்றைய ஆட்சியாளர்கள் அதை கணக்கிலும் எடுக்கவில்லை என்றார்.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam