அநுரவின் அவசரம் - விரைவில் பிள்ளையான் வெளியே!
இலங்கையை உலுக்கிய பயங்கரவாத தாக்குதலான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் ஜனாதிபதி அநுரகுமார ஆட்சி ஏற்பதற்கு முன்னரும் ஆட்சியை ஏற்ற பின்பும் பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.
இவருடைய வாக்குறுதிகள் வெறுமனே தேர்தல் காலத்தில் மக்களின் வாக்குகளை பெறுவதற்கானவை என்ற விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுகின்றன.
இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஆறாவது நினைவாண்டு அடுத்த வாரம் நினைவுகூறப்படவுள்ள தருணத்தில் அந்த தாக்குதலுக்கு காரணமான சூத்திரதாரிகள் யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார்.
இந்நிலையில் இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அநுரவின் வாக்குறுதிகள் பற்றி ஊடறுப்பு நிகழ்ச்சியூடாக கனடா அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ள கருத்துக்களை இந்த காணொளியில் காணலாம்...