ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நிதி உதவி வழங்கிய பாப்பாண்டவர்
பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ், உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சுமார் 400 லட்சம் ரூபா நிதி உதவி வழங்கியுள்ளார்.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இந்த பணம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பேராயார் இல்ல தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் அருட்தந்தை ஜுட் பெர்னாண்டோ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

கடந்த பெப்ரவரி மாதம் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கான் விஜயம் செய்திருந்த போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்காக தாம் ஒரு லட்சம் யூரோ வழங்குவதாக பாப்பாண்டவர் கூறியதாகவும் அதன் அடிப்படையில் அந்த தொகையை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பகிரப்படும் நிதியுதவி

இந்த நிதி நாளைய தினம் முதல் கட்டம் கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
முதல் கட்டமாக நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தாக்குதலுக்கு இலக்கானோர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட உள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், காயங்கள் ஏற்பட்டவர்கள், தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவோர் ஆகியோருக்கு இவ்வாறு நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
| இலங்கையில் சுப்பர் மார்க்கெட்களில் நடக்கும் மோசடி - கடும் கோபத்தில் மக்கள் |
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan