உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இதுவரை வெளியாகாத 8 விடயங்களை பகிரங்கப்படுத்திய அருட்தந்தை
கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளிவராத 8 தகவல்களை தாம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் குறிப்பிட்டதாக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ(FR.Siril Gamini Fernando) தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ நேற்றையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
குற்றப் புலனாய்வுத் துறையினரின் விசாரணை
இது தொடர்பில், கொழும்பு பேராயரின் இல்லத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செயற்படும் பொறுப்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் இல்லை என குறிப்பிடவில்லை. மாறாக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரை உரிய முறையில் சேவையாற்றுவதற்கு இடமளிக்கவில்லை என தோன்றுகிறது.
அதேநேரம், சவால்மிக்க கேள்விகள் எவையும் நேற்று என்னிடம் கேட்கப்படவில்லை. தற்போது வெளியாகாத பல தகவல்கள் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டன.
அதேநேரம் முன்னதாக ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதி ஒன்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுமாயின் ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணியில் உள்ள சகல தரப்பினர் தொடர்பான தகவல்களும் வெளியாகும் என என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
