கோட்டாபயவின் அதிர்ச்சி புகைப்படம்.. ஈஸ்டர் தாக்குதலில் வெளியான முக்கிய ஆதாரம்

CID - Sri Lanka Police Gotabaya Rajapaksa Easter Attack Sri Lanka Crime Channel 4 Easter Attack
By Sajithra Jun 24, 2026 03:18 PM GMT
Report

தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் ஆணையை கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனு விசாரணையில் முக்கிய சாட்சியம் ஒன்று அம்பலமாகியுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (24.06.2026) இடம்பெற்ற விசாரணையில் குறித்த சாட்சியம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில் பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையாகிய சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக செலிசிட்டர் ஜெனரல், கோட்டாபய குறித்த முக்கிய புகைப்படம் ஒன்றை முன்வைத்துள்ளார்.

இதன்போது, கோட்டாபய ராஜபக்சவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து செனல் 4 அலைவரிசைக்கு தகவல்களை வழங்கிய அசாத் மெளலானா என்றழைக்கப்படும் மொஹமட் மஹிலார் மொஹமட் ஹன்ஸீரும் ஒன்றாய் இருக்கும் புகைப்படத்தை நீதிமன்றில் முன்வைத்துள்ளனர்.

இளம் பெண் வைத்தியர் படுகொலை..! பிரதான சூத்திரதாரியின் மனைவி, குழந்தைகள் பரபரப்பு வாக்குமூலம்

இளம் பெண் வைத்தியர் படுகொலை..! பிரதான சூத்திரதாரியின் மனைவி, குழந்தைகள் பரபரப்பு வாக்குமூலம்

முக்கிய புகைப்படம் 

இது குறித்து தெரிய வருகையில், கோட்டாபய ராஜபக்சவின் கைது நடவடிக்கையைத் தடுப்பதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

கோட்டாபயவின் அதிர்ச்சி புகைப்படம்.. ஈஸ்டர் தாக்குதலில் வெளியான முக்கிய ஆதாரம் | Easter Attack Goatabaya Pettision Asad Moulana

அதன்போது, ​​சட்டமா அதிபர் திணைக்களத்தால் சமர்ப்பிக்கப்பட்ட, கோட்டாபய ராஜபக்ச மற்றும் அசாத் மௌலானா ஆகியோரின் கூட்டுப் புகைப்படம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது தனது கட்சிக்காரருக்கு நினைவில் இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்தார்.

மேலும், பல்வேறு தரப்பினர் அரசியல்வாதிகளைத் தவறாமல் சந்திக்க வருவதால், அத்தகைய புகைப்படம் இருந்ததற்கான நினைவு இல்லாததில் ஆச்சரியமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

2017ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அசாத் மௌலானா சந்தித்தார் என்ற கூற்றை ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா முழுமையாக மறுக்கவில்லை.

நான் உயிருடன் இருந்தால் மீண்டும் வருவேன்... உயிரிழந்த மாணவியின் இறுதி குறுந்தகவல்

நான் உயிருடன் இருந்தால் மீண்டும் வருவேன்... உயிரிழந்த மாணவியின் இறுதி குறுந்தகவல்

அரசியல் படுகொலைகள்

இருப்பினும், அந்தச் சந்திப்பின்போது கோட்டாபய தெரிவித்ததாக கூறப்படும் விடயங்கள், ஒரு அரசியல்வாதியால் சாதாரணமாக நடத்தப்படும் வகையிலான சாதாரண உரையாடல்களே என்று அவர் குறிப்பிட்டார்.

கோட்டாபயவின் அதிர்ச்சி புகைப்படம்.. ஈஸ்டர் தாக்குதலில் வெளியான முக்கிய ஆதாரம் | Easter Attack Goatabaya Pettision Asad Moulana

அசாத் மௌலானாவுடனான சந்திப்பையோ அல்லது அது தொடர்பான புகைப்படத்தையோ மறுக்கவில்லை என்றாலும், செனல் 4க்கு அசாத் மௌலானா அளித்த அறிக்கையையும் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தையும் சமர்ப்பித்த ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா , அந்த உண்மைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று வலியுறுத்தினார்.

நாட்டின் நீதித்துறை, சட்டத்தரணிகள் மற்றும் முக்கிய அரசியல் படுகொலைகள் உள்ளிட்ட பல சம்பவங்கள் குறித்து அசாத் மௌலானா கூறியிருந்த அறிக்கைகளை அவர் நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டினார்.

மேலும், அசாத் மௌலானாவின் அரசியல் சித்தாந்தங்களைச் சுட்டிக்காட்டி, இலங்கையைப் பற்றி இத்தகைய அறிக்கைகளை வெளியிட்ட ஒருவரின் நம்பகத்தன்மையை சட்டமா அதிபர் திணைக்களம் கேள்விக்குள்ளாக்கியது.

கோட்டாபயவின் அதிர்ச்சி புகைப்படம்.. ஈஸ்டர் தாக்குதலில் வெளியான முக்கிய ஆதாரம் | Easter Attack Goatabaya Pettision Asad Moulana

இதுபோன்ற சந்தேகத்திற்குரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஒரு தனிநபரின் கூற்றுகளின் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் முயற்சிப்பது வெட்கக்கேடானது என்று ரொமேஷ் டி சில்வா கூறினார்.

மேலும், அசாத் மௌலானாவின் கூற்றுக்களை நம்புவதை சட்டமா அதிபர் திணைக்களம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஓய்வுபெற்ற நீதிபதிகள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய எண்ணற்ற குழுக்களின் அறிக்கைகளில் கோட்டாபய ராஜபக்வுக்கு எதிராக எந்தவொரு உண்மைகளும் குறிப்பிடப்படாத ஒரு சூழலில், அசாத் மௌலானாவின் ஒரு அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே அவர் கைது செய்யப்படத் தயாராகி வருகிறார் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா வாதத்தைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இன்று பதிலளிக்கப் போதுமான நேரம் இல்லாததால், மேலதிக வாதங்களை முன்வைப்பதற்காக மனு மீதான விசாரணையை ஜூலை 6 மற்றும் ஜூலை 9 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

கொழும்பின் புறநகர் பகுதிகளில் 24 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

கொழும்பின் புறநகர் பகுதிகளில் 24 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US