சிறப்பு திட்டமாக பெயரிடப்பட்ட கிழக்கு கொள்கலன் முனைய திட்டம்

Port of Colombo Vijitha Herath Economy of Sri Lanka
By Dharu Oct 22, 2024 06:34 AM GMT
Report

கிழக்கு கொள்கலன் முனைய திட்டத்தை "சிறப்பு திட்டமாக" பெயரிட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை துறைமுக அதிகாரசபை கடந்த, 02.01.2021 திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொழும்பு தெற்கு துறைமுகத் திட்டத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதற்கும், அதனை அதிகாரத்தின் முழு உரிமையின் கீழ் கொள்கலன் முனையமாக செயற்படுத்துவதற்கும் அனுமதி வழங்கியிருந்தது.

இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவிற்கு 3000 முறைப்பாடுகள் பதிவு!

இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவிற்கு 3000 முறைப்பாடுகள் பதிவு!

நிர்மாணப் பணிகள் 

இதன்படி, குறித்த சிவில் வேலைகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதுடன், நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.

சிறப்பு திட்டமாக பெயரிடப்பட்ட கிழக்கு கொள்கலன் முனைய திட்டம் | East Container Terminal Project Of Colombo Port

மேலும், குறித்த கொள்கலன் முனையத்திற்கான கிரேன்கள் கொள்வனவு செய்வதற்கான கொள்முதலும் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு துறைமுகத்தின் தனியார் முனைய செயற்பாட்டாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் மூலோபாய அபிவிருத்திச் சட்டம் மற்றும் முதலீட்டுச் சபைச் சட்டத்தின் கீழ் பல்வேறு வரிச் சலுகைகளைப் பெறுவார்கள் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

எரிவாயுவின் விலையை அதிகரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை

எரிவாயுவின் விலையை அதிகரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை

கிழக்கு கொள்கலன் முனைய திட்ட பின்னணி

இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான கூட்டுத் திட்டமாக, 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் காணப்படுகிறது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பிலான உடன்படிக்கையொன்று இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்படவுள்ளதை தொடர்ந்து இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கை ஊடாக தேசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அதற்கான வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் சர்வதேச பங்காளர்களுடனான உறவை மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அப்போதைய துறைமுக அதிகார சபை தெரிவித்தது.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை ஊடாக கிழக்கு முனையத்தின் 100 வீத உரிமம் இலங்கை துறைமுகங்கள் அதிகார சபைக்கும் என அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்தத் திட்டத்தின்கீழ் நடவடிக்கை நிறுவனம் எனும் பெயரில் புதிய நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதுடன் அதில் 51 வீத உரிமை இலங்கைக்கு கிடைக்கும் எனவும், ஏனைய தரப்பினர் 49 வீதமான பங்குகளைக் கொள்வனவு செய்ய முடியும் எனவும் துறைமுகங்கள் அதிகார சபை விளக்கியிருந்தது.

இந்நிலையில், மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிட்ப்பட்ட கிழக்கு கொள்கலன் முனைய திட்டத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் 2021 ஆம் ஆண்டளவில் முன்னாள் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்சவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இது, 75 ஹெக்டயார் பரப்பளவில் 1,320 மீற்றர் நீளத்தைக் கொண்ட திட்டமாக காணப்படுகிறது.

நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததும், கப்பலில் இருந்து கரை வரை இயக்கப்படும் 12 பளுதூக்கிகள் (STC) மற்றும் தண்டவாளங்களில் இயங்கும் 40 கிரேன் பளுதூக்கிகளுடன் (RMG) ஒரு முழுமையான முனையத்தை இலங்கைத் துறைமுக அதிகார சபை கொண்ட திட்டமாக இது காணப்படுகிறது.

இதற்கான மொத்தச் செலவு 510 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

அக்சஸ் என்ஜினியரிங் பி.எல்.சி (Access Engineering PLC) மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பனி (China Harbour Engineering Company LTD) இணைந்து இந்த நிர்மாணப் பணிகளை மேற்கொள்கின்றன.

கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஆரம்பம்-Colombo Port Eastern Terminal Construction Work Inaugurated “துறைமுகங்களின் தரவரிசைக்கான 2021 ஆம் ஆண்டின் அல்ஃபலைனர் அளவுகோலின்படி, உலகில் 23ஆவது இடத்தில் காணப்பட்டது.

புதிய அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்த பின்னர் 13ஆவது இடத்தைப் பெறும்” என, அப்போதைய துறைமுக விவகாரங்கள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்திருந்தார்.

முல்லைத்தீவில் போதைப்பொருள் பாவனையினை தடுக்க அரச அதிபர் எடுத்த வியூகம்!

முல்லைத்தீவில் போதைப்பொருள் பாவனையினை தடுக்க அரச அதிபர் எடுத்த வியூகம்!

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, அளவெட்டி, கொழும்பு

07 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US