சற்றுமுன்னர் ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை
ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைக்கு அருகில் இன்று(20)பிற்பகலில் 7.4 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக Japan Meteorological Agency தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தையடுத்து, இவாத்தே, ஆமோரி மற்றும் ஹொக்கைடோ மாகாணங்களில் அதிகபட்சம் 3 மீட்டர் (9.84 அடி) உயரம் வரை சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆறு மணிநேரமாக மீண்டும் மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை! கடலின் நடுவில் அதிரடி காட்டிய அமெரிக்கா - வெளியான காணொளி
சுனாமி எச்சரிக்கை
இந்த நிலநடுக்கத்தின் மையம் பசிபிக் பெருங்கடலில் அமைந்திருந்ததுடன், அது 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஜப்பானின் நிலநடுக்க தீவிர அளவுகோலில் ‘மேல் 5’ (Upper 5) என்ற அளவில் இந்த அதிர்வு பதிவாகியுள்ளது.
இது மக்கள் சுதந்திரமாக நகர்வதற்கு கடினமாக இருக்கும் அளவுக்கு வலிமையானதாகும். பல இடங்களில் உறுதிப்படுத்தப்படாத கான்கிரீட் சுவர்கள் இடிந்து விழும் அபாயமும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.