ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - அண்டை நாடுகளிலும் தாக்கம்
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிலநடுக்கமானது இன்று (19.02.2024) ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
10 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததால் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
பரவலாக நில அதிர்வு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் தெற்கே-தென்மேற்கு திசையில் 632 கிலோமீற்றர் தொலைவில் பாகிஸ்தானையொட்டிய பலோசிஸ்தானின் நுஷ்கி பகுதியிலிருந்து 65 கி.மீ தொலைவிலும் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தானிலும் உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், பெரிதாக சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri