பசுபிக் தீவு ஒன்றில் மீண்டும் எரிமலை வெடிப்பு! சுனாமி எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்து சிதறியதை அடுத்து ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பசுபிக் பெருகடலில் அமைந்துள்ள தீவான டொங்காவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்த நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன.
இவற்றில் சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளன..
இந்தநிலையில், அந்த தீவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்துள்ளது.
இதனால், கடலில் சுனாமி( ஆழிப்பேரலை) அலை உருவானது. சுனாமி அலைகள் டொங்கா தீவில் மக்கள் வசிக்கும் பகுதிகளை பாதித்தன.
தற்போது மீண்டும் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் பெரிய அளவிலான சுனாமி அலைகள் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.
அதற்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan