காரமுனையில் ஆட்சியாளர்கள் நில உரிமை மோசடி: கண்டனம் தெரிவித்த இ. சிறிநாத்
காட்டிக்கொடுப்புக்களாலும் சோர்ந்து போன அரசியலாலும், சொந்த நிலத்தில் இருந்த மக்களின் இருப்பை உறுதிப்படுத்தச் சொல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், வடக்கில் மணலாறு எவ்வாறு குறிவைக்கப்பட்டதோ, அதேபோல் இன்று மட்டக்களப்பில் காரமுனை மண் இலக்காக மாற்றப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இ. சிறிநாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்றைய தினம் (15.02.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
கோரிக்கை முன் வைப்பு
இந்த கூட்டத்தில், காரமுனையில் நடைபெற்று வரும் செயற்பாடுகளையும், அந்த கிராமத்தில் தமிழ் மக்கள் வாழ்வதற்கான ஆதாரங்களையும் முன்வைத்து, அம்மக்களின் நில உரிமையை மீட்டுத் தருமாறு நாடாளுமன்ற உறுப்பினரிடம் வலுவான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும், இது தொடர்பாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தனது கடுமையான கண்டனத்தையும், மக்களின் இருப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் தெரிவித்துள்ளார்.
அவர், மாங்கேணி தெற்கு கிராம அலுவலகர் பிரிவுக்கு நேரடியாக சென்று மக்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு தெளிவூட்டியுள்ளார்.
இதன்போது, கடந்த காலங்களில் தரகு அரசியல் செய்த ஒரு அரசியல்வாதி, மாங்கேணியில் இருந்த மக்களிடம் உறுதிப்பத்திரங்களைப் பெற்றுத் தருவதாக கூறி, அவர்களிடமிருந்து பத்திரங்களின் நகல் பிரதிகளை பெற்றுச் சென்றும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அந்த நகல் பத்திரங்கள் மக்களிடம் திருப்பிக் கொடுக்கப்படவில்லை என்றும் மக்கள் தெரிவித்தனர்.
அத்துடன், இங்கு கடமையாற்றிய சில அரச அதிகாரிகள் தங்களது சொந்த சலுகைகளுக்காக மாற்றுச் சமூகத்திடம் மண்டியிட்டதுடன், இன்று காரமுனை நிலம் சூறையாடப்படுவதற்கு அவர்களது ஒழுக்கமற்ற செயற்பாடுகளும் காரணம் என குற்றம்சாட்டினார்.
இடையூறு விளைவித்த விசமிகள்
அதேபோன்று, அந்தப் பிரதேசத்தை அண்டி வாழும் சிலர் பணத்திற்காக தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், பிரதேச செயலகத்துடன் இணைந்து செயல்படும் பெண் உறுப்பினர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசி வழியாக மாற்றுச் சமூகத்தினரிடமிருந்து மிரட்டல் செய்திகள் வருவதாகவும் வெளிப்படுத்தப்பட்டது.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர், கடந்த காலங்களில் ஊழல் வழியில் செயல்பட்ட அரச அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்களின் செயற்பாடுகளை நாடாளுமன்ற புகார் பிரிவுக்கு அறிவிக்கவும் ஆவணப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அச்சுறுத்தலுக்கு உள்ளான பெண் சமூக செயற்பாட்டாளர்கள் இதுகுறித்து முறைப்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், நேற்றைய தினம் (14.02.2026) குறித்த பகுதியில் வெட்டப்பட்ட காடுகளையும் அங்குள்ள தமிழர் வழிபாட்டு கோவிலையும் பார்வையிட அவர் கள விஜயம் மேற்கொண்டார்.
அப்போது அங்கு வந்த சில காடழிப்பு குழுக்கள் மற்றும் விசமிகள், குறித்த இடத்தை பார்வையிடத் தடுக்க முயன்றதுடன், மக்கள் ஆணையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்தலும் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam