தமிழ் மக்களை தொடர்ச்சியாக பயங்கரவாதிகளாக தான் பார்க்க போகின்றார்களா! சரவணபவன்
தமிழ் மக்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணப்பாடே தையிட்டியில் அரசின் அராஜகத்திற்கு காரணம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
தையிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஈஸ்வரபாதம் சரவணபவன் இன்று (04.05.2023) மாலை 2 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட்ட நால்வருடன் கலந்துரையாடி, கட்டப்பட்ட விகாரையினையும் பார்வையிட்டுள்ளார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
போராட்டங்கள் தொடர வேண்டும்
மேலும் தெரிவிக்கையில், தையிட்டியில் கட்டப்பட்டு முடியும் கட்டத்தில் உள்ள விகாரையை நேரடியாக பார்வையிட்டேன்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தாத நிகழ்வுகளை தான் இந்த அரசு மேற்கொண்டிருக்கின்றது. போராட்டங்கள் தொடர வேண்டும்.
நான் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற பொழுது கூறினார்கள், ஆயிரம் விகாரை கட்டப்போகின்றார்கள் என்று அந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தான் இவ்வாறான விகாரைகள் திட்டமிட்டு முளைத்து கொண்டு வருகின்றன.
மனித உரிமைகள் ஆணைக்குழு
இது சம்பந்தமாக ரணில் பேசப் போகின்றேன், கூப்பிட்டு கதைக்கதான் போகின்றேன் என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றார். ஆனால் எதைப்பற்றி பேசப்போகின்றார்?
தமிழ் மக்களது பிரச்சினை சம்பந்தமாக பேசப் போகின்றேன் என்று சொன்னவர்.
தமிழ் மக்களுடைய தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகள் அதிகார பங்கீடு சம்மந்தமாக நேரடியாக பேசிக் கொள்ளலாம்.
போராட்டம் நடத்த வந்த பொதுமக்களை விரட்டியடித்து, நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட்ட நால்வரை முள்வேலிக்குள் உணவு மருந்தும் கொடுக்காது அடைத்து வைத்திருந்தார்கள்.
பின்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அந்த நிலமை சீராகியது. இது சாதாரண இடம் இதற்கு போய் இவ்வளவு இராணுவம், பொலிஸ் பாதுகாப்பு ஏன் என்று தெரியவில்லை.
இங்கு என்ன இருக்கின்றது என்று இவ்வளவு அடாவடி செய்கின்றார்களோ தெரியவில்லை .
தமிழ் மக்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணம்
இன்னமும் நாங்கள் பயங்கரவாதிகள் தான் என்ற எண்ணம் தான் அவர்களுக்கு இருக்கின்றது. தமிழ் மக்களை தொடர்ச்சியாக பயங்கரவாதிகளாக தான் பார்க்க போகின்றார்களா?
தொடர்ச்சியாக இவ்வாறு தமிழ் மக்களை புண்படுத்த போகின்றார்களா? நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை புரிந்துகொள்வாரா?
இங்க றோட்டிலே படுத்துறங்குகிறார்கள், ஆக தமிழ் மக்களிற்கு எதுவித தீர்வுகளும் கிடைக்கப் போவதில்லை.
அங்கே சுதந்திர தினத்திற்கு முன் செய்து முடிக்க போகின்றேன் என்றார், முடிந்ததா இல்லை.
சிங்கள பெரும்பாண்மை
எங்களை துன்புறுத்தும் சம்பவமே தையிட்டியில் தொடர்கிறது. இங்கு யாருமே இல்லை.
பல இடங்களில், இதோ இனி சுன்னாகத்தில், கந்தோரடையின் தெற்கு பக்கமாக தொடர போகின்றார்கள்.
இப்படியான ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல்களையும் நிறைவேற்றி கொண்டு தான் போகின்றார்கள். தமிழர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கின்றது.
இது மீண்டும் நாங்கள் சாத்வீகத்தினூடாக எதையும்
பெறமுடியாது என்பதனை சிங்கள பெரும்பாண்மை தையிட்டி சம்பவத்தினூடாக
புலப்படுத்துகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
