இலங்கையில் புதிதாக பரவி வரும் மற்றுமொரு போதைப்பொருள்
இலங்கையின் கிராமிய பகுதிகளில் ஈ-சிகரட் பயன்பாடு அதிகரித்துள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
கம்பஹா மற்றும் ஜாஎல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களின் போது சுமார் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான ஈ சிகரட் வகைகள் மீட்கப்பட்டுள்ளன.
இது தெடர்பில் கருத்து வெளியிட்ட மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி, கிராமிய பகுதிகளில் ஈ-சிகரட் பயன்பாடு வியாபித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஈசிகரட் பயன்பாடு பாடசாலை மாணவர்கள் மற்றும் 40 வயதுக்கும் குறைந்தவர்கள் மத்தியில் அதிகளவு காணப்படுவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக கொழும்பு, கம்பஹா, பாணந்துறை போன்ற பகுதிகளில் அதிகளவானவர்கள் ஈ-சிகரட் பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

இரத்தினபுரி பகுதியில் மாணவர் ஒருவர் ஈ-சிகரட் புகைப்பதற்கு வழங்கி கட்டணம் அறவீடு செய்த சம்பவமொன்று பதிவாகியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இணைய விற்பனை தளங்களின் ஊடாக ஈ-சிகரட் வகைகள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
உடல் நலனுக்கு தீங்கு

கைக்கடிகாரங்கள், பவர் பேங்குகள், பென் ட்ரைவ்கள், சென்ட் போத்தல்கள் போன்ற பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக இவ்வாறு ஈ-சிகரட் வகைகள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாம்பழம், ஓரேஞ்ச், செர்ரீ மற்றும் ஸ்டோபரி போன்ற பழ வாசனைகளுடன் இந்த ஈ-சிகரட் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த ஈசிகரட் வகைகள் உடல் நலனுக்கு தீங்கு ஏற்படுத்தும் எனவும் சில நாடுகளில் இவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஈ-சிகரட் வகைகள் விமான நிலையத்தின் ஊடாகவும் கடல் மார்க்கமாகவும் இலங்கைக்குள் கடத்தப்படுவதாக குணசிறி தெரிவித்துள்ளார்.
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam