திருகோணமலையில் ஊரடங்கு நேரத்தில் மதுபோதையில் அட்டகாசம்
திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துவரங்காடு மற்றும் அலஸ் தோட்டம் பகுதிகளில் சிலர் வீதியில் மதுபோதையில் அட்டகாசம் செய்து வருவதாகத் தெரியவருகின்றது.
நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு இருக்கின்ற நிலையில் யாசகம் எடுப்பவர்கள் இரவு நேரங்களில் வீதிகளில் நடமாடி வருவதாகவும், மது அருந்திவிட்டு அட்டகாசம் செய்து வருவதையும் காணக்கூடியதாக இருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறிப்பாக யாசகர்கள் உண்பதற்கு உணவின்றி பகல் நேரங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற காலப்பகுதியில் திருகோணமலை பொது வைத்தியசாலை, காளி கோயில், பிரதான பேருந்து தரிப்பிடம் போன்ற இடங்களில் நின்று கொண்டு யாசகம் பெற்று இரவு நேரங்களில் துவரங்காடு மற்றும் அலஸ் தோட்டம் போன்ற பகுதிகளில் மது அருந்திவிட்டு அட்டகாசம் செய்து வருவதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேநேரம் நேற்றிரவு (10) திருகோணமலை - நிலாவெளி பிரதான வீதி துவரங்காடு பகுதியில் மதுபோதையில் வாகனங்களைச் செல்ல விடாமல் நடுவீதியில் நின்றதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.



விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
