கோவிட் சடலங்களை அடக்கம் செய்ய இரணைதீவு பொருத்தமற்றது – உபுல் ரோஹன
கோவிட் காரணமாக உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமற்றது என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இரணை தீவில் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென அவர் கோரியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரணைதீவில் சடலங்களை அடக்கம் செய்வதன் மூலம் பல்வேறு பிரச்சினைகள் எழக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தீவானது 12 சதுர கிலோ மீற்றர் பரப்பினைக் கொண்டது எனவும் இங்கு 108 குடும்பங்களைச் சேர்ந்த 355 பேர் வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தீவில் நான்கு குடிநீர் கிணறுகளே காணப்படுவதாகவும், இங்கு கோவிட் சடலங்களை புதைப்பதனால் குடிநீர் பிரச்சினை ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அனைத்து விடயங்களையும் கருத்திற் கொண்டு அரசாங்கம் இரணைதீவில் கோவிட் சடலங்களை அடக்கம் செய்வது குறித்து தீர்மானிக்க வேண்டுமென உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam