கோவிட் சடலங்களை அடக்கம் செய்ய இரணைதீவு பொருத்தமற்றது – உபுல் ரோஹன
கோவிட் காரணமாக உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமற்றது என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இரணை தீவில் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென அவர் கோரியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரணைதீவில் சடலங்களை அடக்கம் செய்வதன் மூலம் பல்வேறு பிரச்சினைகள் எழக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தீவானது 12 சதுர கிலோ மீற்றர் பரப்பினைக் கொண்டது எனவும் இங்கு 108 குடும்பங்களைச் சேர்ந்த 355 பேர் வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தீவில் நான்கு குடிநீர் கிணறுகளே காணப்படுவதாகவும், இங்கு கோவிட் சடலங்களை புதைப்பதனால் குடிநீர் பிரச்சினை ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அனைத்து விடயங்களையும் கருத்திற் கொண்டு அரசாங்கம் இரணைதீவில் கோவிட் சடலங்களை அடக்கம் செய்வது குறித்து தீர்மானிக்க வேண்டுமென உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam